engalin uyir

engalin uyir
தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் ( மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தேவர்கள் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். இது முக்குலத்தினர் எனப்படும் கள்ளர்,மறவர்,அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார். ).

Monday 29 August 2011

தேவர் நினைவிடத்தில் அஞ்சலி : ஜெயலலிதா பசும்பொன் வருகை

கமுதி,   ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 104- வது ஜெயந்தி, 49-வது குருபூஜைவிழா அக்.28,29 மற்றும் 30ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

28ஆம் தேதி தேவரின் ஆன்மிக விழாவும், 29ஆம் தேதி அரசியல் விழாவும், 30ஆம் தேதி குருபூஜைவிழாவும் கொண்டாடப்படுகிறது. குருபூஜை விழாவில் தேவரின் பக்தர்கள் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பசும்பொன் வந்து அஞ்சலி செலுத்துகிறார்கள்.

30ஆம் தேதி மதியம் 1 மணிக்கு முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளரூம் தமிழக முதல்வரும்மான திரு.செல்வி ஜெ   ஜெயலலிதா அஞ்சலி செலுத்துகிறார்.

இதற்கான ஏற்பாடுகளை கவனிப்பதற்காக  அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், கண்ணப்பன், அன்வர்ராஜா உட்பட ஏராளமான அதிமுக-வினர் நேற்று பசும்பொன் சென்றனர்.

அங்கு ஹெலிகாப்டர் இறங்கும் ஹெலிபேட் தளம் மற்றும் அங்கிருந்து தேவர் நினைவிடத்திற்கு செல்லும் வழிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

முன்னதாக ஜெயலலிதா வருகையையொட்டி, பார்த்திபனூரில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஜெயலலிதாவின் பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் அதிமுக தொண்டர்கள் ஈடுபடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips