engalin uyir

engalin uyir
தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் ( மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தேவர்கள் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். இது முக்குலத்தினர் எனப்படும் கள்ளர்,மறவர்,அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார். ).

Sunday 28 August 2011

பெண்கள் கூந்தல் மேல் நடக்க மறுக்க பசும்பொன் தேவர்:வைரமுத்து பேச்சு


பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவை, இந்த மாநாட்டில் கொண்டாடியது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். பெரியார் ஒரு காட்டாறு. அதை அணை கட்டி தேக்கி, கடைசி தமிழனின் நிலத்துக்கு கால்வாயாக கொண்டு வந்த பெருமை, அறிஞர் அண்ணாவுக்கு உண்டு.
தமிழர்கள் தங்கள் முன்னோடிகளை மறந்து விடக்கூடாது. கலைவாணர் நூற்றாண்டையும், பசும்பொன் தேவர் திருமகன் நூற்றாண்டையும் நீங்கள் கொண்டாடி இருக்க வேண்டும்.
நகைச்சுவையை பகுத்தறிவுக்கு பயன்படுத்த முடியும் என்று காட்டிய முதல் கலைஞர், கலைவாணர்.தேவர் திருமகனார் பர்மாவுக்கு சென்றபோது, புத்த துறவிகள் அவருக்கு கறுப்பு கம்பள வரவேற்பு கொடுத்தார்கள். அதாவது, பெண்கள் தரையில் படுத்துக்கொள்ள, அவர்கள் தங்கள் கூந்தலை கம்பளமாய் விரிக்க, அதன் மீது நடந்து வருமாறு, தேவர் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
இதைக்கண்டு பதறிப்போன திருமகனார், “பெண்களை கடவுள் போன்று கும்பிடுகிற தமிழகத்தில் இருந்து வந்தவன் நான்” என்று சொல்லி மறுத்து விட்டார். அந்த பண்பாடு, இன்றைய தலைமுறைக்கு புரிந்தாக வேண்டும்’’என்று பேசினார்.
….

No comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips