engalin uyir

engalin uyir
தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் ( மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தேவர்கள் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். இது முக்குலத்தினர் எனப்படும் கள்ளர்,மறவர்,அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார். ).

Monday 29 August 2011

பூலித்தேவர் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்: பசும்பொன் தேவர் மக்கள் இயக்க கூட்டத்தில் தீர்மானம்

நெல்லை, ஆக.14-
 
பசும்பொன் தேவர் மக்கள் இயக்கம் சார்பில் பூலித்தேவர் பிறந்த நாள்விழா, மருதுபாண்டியர் நினைவு நாள், முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா ஆகிய முப்பெரும் விழா கூட்டம் பாளையில் இன்று நடந்தது.
 
விழாவுக்கு பசும்பொன் தேசிய கழக மாநில பொருளாளர் ராமர் தலைமை தாங்கினார். செயலாளர் மகேஸ்வரன், சினிமா டைரக்டர் உதயன், மாநில வக்கீல் அணி செயலாளர் முத்துமந்திர மூர்த்தி ஆகியோர்முன்னிலை வகித்தனர். நெல்லை மாநகர செயலாளர் மாணிக்கராஜ் வரவேற்று பேசினார். பசும்பொன் தேவர் மக்கள் இயக்க தலைவரும், முத்துராமலிங்க தேவரின் பேரனுமான வெள்ளைச்சாமி தேவர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
 
சிறப்பு விருந்தினர்களாக நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து, டைரக்டர் மனோஜ்குமார், சென்னை தொழிலதிபர் எழில் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
 
பூலித்தேவர் பிறந்த நாளான செப்டம்பர்1-ந்தேதியை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். மதுரைவிமானநிலையத்திற்கு வருகிற 30-ந்தேதிக்குள் முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டவேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் மருதுசகோதரர்கள் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். முத்துராமலிங்க தேவர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்.
 
கள்ளர், மறவர், அகமுடையாரை தேவர் இனம் என அறிவித்து முறையான அரசாணை வெளியிட வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டம் அனைத்து சமுதாய மக்கள் மீது தவறாக பயன்படுத்துவது தடுக்கப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips