engalin uyir

engalin uyir
தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் ( மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தேவர்கள் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். இது முக்குலத்தினர் எனப்படும் கள்ளர்,மறவர்,அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார். ).

Monday 29 August 2011

பசும்பொன் தேவர்

ஓர் சிறு கல்லின் மேல் நின்று கொண்டு மதப்பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார் கிறித்தவப் பாதிரியார் நாகர் கோவிலிலிருந்து வந்த மைக்கேல் தம்புராசு.

"பாவிகளே ! கல்லை வணங்காதீர்கள், இதோ நான் நிற்பதும் ஓர் கல், இதே கல்தூண் கோவிலில் உள்ள சிலையாக அமைக்கப்பட்டுள்ளது. இரண்டும் ஒன்றுதான். அந்தக் கல்லை வணங்குவது பாவம் .. . . . .கூடாது. . . .!

பாதிரியார் பேச்சை மேலும் கேட்டுக் கொண்டிருக்க விரும்பவில்லை மாணவன் பேச்சை இடைமமறித்தான் . . .!

"பாதிரியார் அவர்களே ! ஓர் சந்தேகம் அதை நீங்கள் . . .!

"என்ன சந்தேகம் அதை விளக்கத்தானே ஆண்டவன் என்னை ... . . !

"அப்படியனால். . . !கோவப்படக்கூடாது நீங்கள் . . . !"

"எனக்கேன் வருகிறது கோவம்".எதுவானாலும் கேளுங்கள் . . .!

"நான் நிற்பதும் ஓர் கல் . கோவிலின்உள்ளே சிலையாக இருப்பதும் கல் . . .!"என்று குறிப்பிட்டீர்கள்

"இரண்டும் கல் தான் இதிலென்ன . . . !"

"சிலபாதிரிமார்களுக்கு தாயார், அக்காள்,தங்கை, உறவுபெண்களும் உண்டு".

"ஆமாம் ...!"

"சிலபாதிரிமார்களுக்கு . . .! மனைவியும் மக்களும் இருக்கிறார்கள்."

"உண்மைதான்"

"இவர்கள் அனைவரும் . . . .! பெண்கள் தானே?"

"சந்தேகம் என்ன வந்தது இதிலே. . . ?"

"அவர்கள் அனைவரும் ஒரே பெண்கள்தான் என்ற நிலை ஏற்படுமேயானால். . .!ஒரு மனைவியை பாவிக்கிறமாதிரி தங்களது தாய் ,தங்கையர்களை பாவிக்க முடியுமா? அப்படிபாவித்தால் அவர்களை என்ன சொல்லும் உலகம்.. .? நீங்கள் இதில் .. . ?"

இடி யோசை கேட்ட நாகம் போலாகிவிட்டார் பாதிரியார். எதிர்பாராது எழுந்த இக் கேள்வியைக்கேட்டதும்,

அது வரையிலும் வாயைடைத்துப் போய்நின்ற பொருங்கூட்டத்தினர் எழுப்பிய

ஆரவாரங்கள் , கையோலிகள் விண்னையெட்டும் அளவிற்கு உயர்ந்தெழுந்தன

பல வினாடிகளுக்குப் பின்னர் தெளிவுபெற்றார் பாதிரியார் .

"தம்பி இங்கே வாருங்கள் ... ' '

"பிறமதங்களைப் பழிக்கக்கூடாது என்பது ஆண்டவன் இட்ட கட்டளைகளில் ஒன்றாகும், அதை மறந்தேன் , தக்கசமயத்தில் வந்து உதவிசெய்தீர்கள். உண்மையிலேயே அறிவு முதிர்ச்சி பெற்ற ஓர் தலைவன் . நல்ல எதிர்காலம் உண்டு. நீங்கள் தேவன்தான். நன்றி", அடுத்த வினாடியே வெளியேறினார் கூட்டத்தை விட்டு பாதிரியார்.
அந்த மாணவன் தான் முத்துராமலிங்கத் தேவர்

No comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips