engalin uyir

engalin uyir
தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் ( மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தேவர்கள் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். இது முக்குலத்தினர் எனப்படும் கள்ளர்,மறவர்,அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார். ).

Tuesday 8 November 2011

ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.





.N . வெள்ளைச்சாமித் தேவர்




முத்துராமலிங்கத் தேவரின் வாரிசுகளில் ஒருவரான வெள்ளைச்சாமி தேவர் மரணமடைந்ததற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி:
பசும்பொன் தேசிய கழகம் மற்றும் பசும்பொன் தேவர் மக்கள் இயக்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவரும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் வாரிசுகளில் ஒருவருமான என். வெள்ளைச்சாமி தேவர் இன்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
வெள்ளைச்சாமி தேவர் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது இயக்கத்தினை சார்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.


Monday 7 November 2011

முக்குலத்து புலிகள் படைசூழ மாபெரும் எழச்சி பேரணி

































முக்குலத்து புலிகள் அமைப்பின் சார்பாக முக்குலத்து புலிகள் அமைப்பின் நிறுவன தலைவர் அண்ணன் ஆறு சரவணதேவர் தலைமையில் ராஜராஜ சோழ தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது முன்னதாக முக்குலத்து புலிகள் படைசூழ மாபெரும் எழச்சி பேரணி போது எடுகப்பட்ட புகைபடங்கள் இதை நமக்கு அளித்த முக்குலத்து புலி மேகன் தேவர் அவர்களுக்கு நன்றி.....

ஆறு சரவணதேவர்


ராஜராஜ சோழ தேவர் சதய விழா இனிதே நிறைஉற்றது. முக்குலத்து புலிகள் அமைப்பின் சார்பாக முக்குலத்து புலிகள் அமைப்பின் நிறுவன தலைவர் அண்ணன் ஆறு சரவணதேவர் தலைமையில் ராஜராஜ சோழ தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது முன்னதாக முக்குலத்து புலிகள் படைசூழ மாபெரும் எழச்சி பேரணி உடன் இனிதே நிறைவுபெற்றது.இந்த சதய விழாவை இனிதே நடத்திமுடிக்க உறுதுணையாக அனைத்து நல்உள்ளங்களுக்கும் முக்குலத்து புலிகள் அமைப்பின் சார்பாக நன்றி! நன்றி!! நன்றி!!!

Thursday 3 November 2011

ஆறு.சரவணத்தேவர்







நம் குல தெய்வம் பசும்பொன் அய்யா வின் கோவிலில் நமது முக்குலத்து புலிகள் அமைப்பின் தலைவர் ஆறு.சரவணத்தேவர் அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்....
Animated Social Gadget - Blogger And Wordpress Tips