engalin uyir

engalin uyir
தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் ( மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தேவர்கள் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். இது முக்குலத்தினர் எனப்படும் கள்ளர்,மறவர்,அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார். ).

Wednesday 19 October 2011

மீண்டும் பதற்றம் : தேவர் சிலையை அவமதித்த சாதி வெறியாளர்கள் யாரென அறிந்தும் கைது செய்யாததால் மீண்டும் ராஜபாளையத்தில் பதற்றம்.

கடந்த 13-09-2011 அன்று தெய்வீகத் திருமகன் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் சிலையை அவமதிப்பு செய்தவர்களில் ஒருவனான செல்வம் ராஜபாளையம் மதுபான கடையில் வேலைபார்ப்பவன் என்ற செய்தி கிடைத்துள்ளது. அதை அறிந்த மக்கள் காவல்துறையிடம் முறையிட்டும் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லையென தெரிகிறது. அதையடுத்து இரண்டு நாளாக காவல்துறையை நம்பிய பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து இன்று மாலை
 மீண்டும் சாலைமறியலில் ஈடுபட்டு காவல்துறைக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதன் தொடர்பாக முக்குலத்தோர் மக்கள் கட்சி தலைவர் திரு.தேவ காசிமய பாண்டியன் அவர்களை தொடர்பு கொண்டபோது " சிலையை அவமதித்தவன் வீட்டைச் சுற்றி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.காவல் துறையினரின் செயல்பாடு திருப்தியில்லாததால் ராஜபாளையம் மக்கள் கொதித்துப் போயுள்ளனர். இந்த நிலை நீடித்தால் எங்களின் குணத்தை காட்ட
வேண்டியிருக்கும் " என்று கோபமாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips