engalin uyir

engalin uyir
தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் ( மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தேவர்கள் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். இது முக்குலத்தினர் எனப்படும் கள்ளர்,மறவர்,அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார். ).

Tuesday 10 January 2012

கொல்கத்தாவில் தேவர் சிலை திறப்பு 08/01/2012

நீதிக்கட்சி சார்பாக வேட்பாளராக ராமநாதபுர அரசர் தேர்தலில் 


நிறுத்தப்படுகிறார். செல்வாக்கு மிக்க அரசரை எதிர்த்து தேர்தலில் நிற்க 


காங்கிரஸ் கட்ச்சியில் யாரும் முன்வரவில்லை. யாரை வேட்பாளராக 


நிறுத்துவது என்று காங்கிரஸ் கட்ச்சியில் பெரிய குழப்பம். அன்றைய AD HOC 


COMITTEE திகைத்து நின்றது. 


அந்த தருணத்தில், இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அறியப்படும் சர்தார் 


வல்லபாய் பட்டேல் அவர்கள் ஒரு முடிவு எடுக்கிறார்.


பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள், அரசரை எதிர்த்து தேர்தலில் 


வேட்பாளராக போட்டியிடவேண்டும் என்று. யாரும் எதிர்பாராத வகையில் 


மாபெரும் வெற்றி பெற்றார் தேவர் பெருமகனார்.

காலத்தின் கோலம் பாருங்கள். நேதாஜியின் அரசியல் குரு சித்தரஞ்சன் தாஸ் 



அவர்களின் பேரில் அமைந்த சாலையில் சர்தார் வல்லபாய் பட்டேல் 


அவர்களுக்கு இருக்கும் சிலைக்கு இரண்டு அடி தூரத்தில் தேவர் 


அவர்களுக்கும் ஜனவரி எட்டாம் திகதி கொல்கட்டாவில் முழுஉருவ சிலை 


திறக்கப்பட்டது.












மறைந்தாலும் மாபெரும் தலைவர்களை பிரிக்க முடியாது.

No comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips