engalin uyir

engalin uyir
தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் ( மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தேவர்கள் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். இது முக்குலத்தினர் எனப்படும் கள்ளர்,மறவர்,அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார். ).

Monday 19 December 2011

முல்லை பெரியாற்றுப் போராட்டம் - தேவரின பாதுகாப்பு பேரவை



முல்லை பெரியாற்று உரிமையை நிலைநாட்டவும் , பெரியற்றுச் சதியில் ஈடுபடும் கேரளா மற்றும் மத்திய அரசை கண்டித்தும் மேலூரில் கடையடைப்பு, வேலை நிறுத்தம் மற்றும் ஊர்வலம் நடத்தப்பட்டது.


மதுரை மாவட்டம் மேலூரில் முல்லை பெரியாற்றை உடைத்து புதிய அணை கட்டப்போவதாக மிரட்டும் கேரளா அரசைக் கண்டித்தும் , உச்சநீதிமன்றம் பலகட்டங்களில் ஆராய்ந்து வெளியிட்ட ஆணையை உதாசீனப் படுத்தி இந்திய அரசையே அவமானப்படுத்திய ஆணவப்போக்கையும் கண்டித்து 10.11.2010 அன்று ஒருநாள் கடையடைப்பு ,ஊர்வலம் மற்றும் வேலை நிறுத்தத்தை தேவரின பாதுகாப்புக் கழகம் ஒருங்கிணைத்து செயல்படுத்தினர். இந்த நிகழ்வில் அனைத்து சங்கங்களும் கலந்துகொண்டனர்.

தேவரின பாதுகாப்பு பேரவை சார்பாக அதன் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சிவ.கலைமணி , தலைமை நிலையச் செயலாளர் ஆண்டிச்சாமி, இளையோர் அணிச்செயலாளர் மாணிக்கம், துணைச்செயலாளர் பாண்டி , மேலூர் ஒன்றியச் செயலாளர் மதன் குமார், மேலூர் நகர் செயலாளர் இளவரசு , மாநில அமைப்புச் செயலாளர் கருப்பையா மற்றும் தேவரின பாதுகாப்பு பேரவை தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டு போராட்டத்தை வலுப்படுத்தினர்.

No comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips